'சங்கொலி' இதழில் வெளிவந்த தலைவர் வைகோ அவர்களின் உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் முதலானவைகள், நூற்றுக்கணக்கான சிறு நூல்களாக கழகத் தோழர்களால் வெளியிடப்பட்டன. தங்கள் மணவிழாக்களில், தாம் பூலகத்திற்கு மாற்றாக அவைகளை உறவினர்களிடம் வழங்கும் 'அமைதிப் புரட்சியை' கழகத் தோழர்கள் ஆரவார மின்றி நிகழ்த்தி சாதனை படைத்தார்கள்.
சங்கொலியின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய க.திருநாவுக்கரசு, சங்கொலி இதழில் 18 வாரங்களாக எழுதிய திருக்குறள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் 'திருக்குறளும் திராவிடர் இயக்கமும்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. தலைவர் வைகோ அவர்களின் அணிந்துரை, 'சிந்தனையாளன்' இதழ் ஆசிரியர் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் சிறப்புரை ஆகியன இந்நூலுக்கு மகுடம் சூட்டியது! 1997 பிப்ரவரியில் இந்நூல் வெளிவந்தது!
பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் எழுச்சி மிகு உரைகளைப் போலவே, அவரின் 17 கடிதங்களையும் சங்கொலி இதழில் வெளியானதை கடலூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க 2003 ஜுலைத் திங்களில் வைகோவின் கடிதங்கள்-1 என்ற 104 பக்கங்கள் கொண்ட நூலாக 20 ரூபாய் விலையில் வெளியிட்டது.
நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, திராவிட இயக்க மூத்த தலைவர் இரா.செழியன், நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, எழுத்தாளர்கள் ராஜ்நாராயணன், வல்லிக்கண்ணன், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார் முதலான அறிஞர் பெருமக்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற தளபதி ஆல்ஃபிரட் ஃடிரேபஸ் மீது பழி சுமத்தப்பட்டு குற்றம் அற்ற வனாக அவன் மீண்ட வரலாறு, ஈழத்துயாரம் குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதங்கள், கழக கண்மணிகளுக்கு இயக்கம் குறித்து எழுதிய கடிதங்கள் என சங்கொலி இதழில் வெளிவந்த தலைவர் வைகோவின் 14 கடிதங்கள், வைகோ கடிதங்கள்-2 என்ற பெயரில், ஆந்திர மாநில நெல்லூர் கழகத் தோழர்கள் 2007 ஆம் ஆண்டு ஜுன் திங்களில் வெளியிட்டார்கள். விழுப்புரம் நகரில் 30.06.2007 அன்று நடைபெற்ற கழக மண்டல மாநாட்டில் இந்நூல் வெளியிடப்பட்டது.
பொடா சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் 222 ஆம் எண் கொட்டடியில் தண்டனை பெற்ற 19 மாத காலகட்டத்தில், சங்கொலி இதழில், தன் கண்மணிகளுக்கு தலைவர் வைகோ எழுதி 61 கடிதங்கள்தான், 'சிறையில் விரிந்த மடல்கள்' என்ற தமிழ் நூலும், From the Portals of a Prison என்ற ஆங்கில நூலும் ஆகும்.
கவிஞர் தமிழ்மறவன், ஆ.வந்தியத்தேவன், கவிஞர் மா.மணிவேந்தன் ஆகியோரின் சங்கொலி படைப்புக்களை, அரசியலில் அதிசய பிம்பமாக விளங்கும் பெரியாரின் போர்வாள் அண்ணா, நம்மால் விடியும் என்ற தலைப்புக்களில் தலைமைக் கழகமே நூலாக்கி வெளியிட்டது. தலைவர் வைகோ நூலாசிரியர்களைப் பாராட்டி, வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார். சங்கொலி 30 ஆம் ஆண்டு நிறைவு விழா 17.07.2026 அன்று மாலை 4 மணிக்கு சென்னை எழும்பூர் சீராஜ் மகாலில் நடைபெறுகிறது.

