சனி, 11 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
சங்கொலி
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்அணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்அணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு

திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார்

திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ரூ.1 கோடியே 56 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள், பேருந்து நிழற்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார். அமைச்சர் ரமேஷ் அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்ல, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் மக்கள் நலப் பணிகளும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் அரசியலின் உண்மையான வெற்றியாகக் கருதும் துரை வைகோ எம்.பி. அவர்கள், 12.06.2026 அன்று திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், 2025-2026 ஆம் ஆண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS) மொத்தம் ரூ.1 கோடியே 56 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலும், தலைவர் வைகோ அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் நிதி ரூ.29 இலட்சம் மதிப்பிலும் கட்டப்பட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தார்.

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜீயபுரம் மற்றும் அம்மன்குடி ஆகிய இரு சட்டமன்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சீ.ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

காலை 8:30 மணிக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 54வது வார்டு வேடுவர் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். தொடர்ந்து காலை 9 மணியளவில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, 20வது வார்டு பூலோகநாதர் கோவில் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார்.

நாள் முழுவதும் — சஞ்சீவி நகர் பகுதியில் நியாய விலைக் கடை, திருவெறும்பூர் தொகுதி எழில்நகரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குண்டூர் ஊராட்சியில் ரூ.17.80 இலட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம், ஜீயபுரத்தில் ரூ.8 இலட்சம் மதிப்பில் பேருந்து நிழற்கூடம், அந்தநல்லூர் ஒன்றியம் அம்மன்குடியில் ரூ.10.60 இலட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, மணிகண்டம் ஒன்றியத்தில் சோமரசன்பேட்டையில் ரூ.2.25 இலட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு, நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் இனியாநுாரில் ரூ.29 இலட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பாகனூர் ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம், மணப்பாறை ஒன்றியம் கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பில் சீரணி அரங்கம் — என ஒவ்வொன்றாக திறந்து வைத்தார்.

குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்கான அங்கன்வாடி மையங்கள், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகுப்பறை கட்டடங்கள், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கத் தொட்டிகள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான நியாயவிலைக் கடைகள், சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் ஆழ்குழாய் திட்டங்கள் என ஒவ்வொரு திட்டமும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டிருப்பதை நேரில் கண்டு துரை வைகோ எம்.பி. மகிழ்ச்சி அடைந்தார்.

"மக்களின் தேவைகளை உணர்ந்து, தொகுதி முழுவதும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதில் மனம் நிறைவடைவதாகவும்; இன்னும் தொடர்வேன்" என்றும் துரை வைகோ எம்.பி. கூறினார்.

திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார் | சங்கொலி